Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

செவ்வாய், 19 டிசம்பர், 2017

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தினம் அறிவிப்பு


அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இதனை
தெரிவித்தார்.

இதேவேளை 248 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது. எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்களை கையளிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

சுயேட்சை குழுக்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஆதாரம் :
News 1st செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக