Dec 06, 2017
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த சிறுநீரக
வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகிறது.
பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அருகில் 28 ஆம் மைல்கல் பகுதியில் அமைக்கப்படும் இந்த வைத்தியசாலைக்கு 12,000 மில்லின் ரூபா செலவிடப்படவுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் சகல வசதிகளையும் கொண்டதாக இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை, சிறுநீரக கலவைப் பிரிப்பு உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.
வௌி நோயாளர் பிரிவு, 200 கட்டில்களைக் கொண்ட விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல வசதிகளையும் கொண்டதாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக