வெள்ளி, 15 டிசம்பர், 2017
10,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை விடுவிக்க தீர்மானித்துள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய
, 75,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உர இறக்குமதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
யூரியா உரங்களின் தட்டுப்பாட்டினால் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக