Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

செவ்வாய், 23 ஜனவரி, 2018

இலங்கையின் பிரபல பொப் இசை பாடகரும் நடிகருமான மனோகரன் காலமானார் …


"சுராங்கனி..." பாடலின் சொந்தக்காரரான
இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான ஏ.ஈ மனோகரன் நேற்று காலமானார்.
உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது 73 ஆவது வயதில் சென்னையில் மரணமானதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

பல மொழிகளில்
பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்த அவர், பாப் இசைச் சக்கரவர்த்தி என போற்றப்பட்டார்.
இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா… என்ற பைலா வகை பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.

இந்த பாடல் மூலம் அவர் இலங்கையில் மட்டுமல்லாது உலக ரசிகர்களால் அறியப்படுகின்றார்.
சிலோன் மனோகர் என்று தென்னிந்தியாவில் அறியப்படும் அவர், புகழ்பெற்ற பொப் இசைப் பாடகராக மட்டுமல்லாது, திரைப்பட நடிகராகவும் வலம் வந்தவராவார்.

இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடிப்பு மற்றும் பாடும் கலைப்பணியை தொடர்ந்துவந்தார்.

தமிழ், இந்தி திரைப்படங்களிலும், நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ என்ற திரைப்படத்தில் நடித்தும் பாடியும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக