மன அழுத்தம், வெயிலில் சுற்றுவது, பசி, மூளையைச் சுற்றியுள்ள உறையில் நோய் தொற்று, மூளையின் ரத்தக் குழாயில் ரத்தக்கசிவு ஆகிய
வற்றினால் தலைவலி ஏற்படுகிறது. இதை உடனே போக்க அற்புதமான டிப்ஸ்கள் இதோ👇
தலைவலியை போக்க என்ன செய்ய வேண்டும்?
🔯சூடான நீரில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அதில் சிறிது உப்பு கலந்து குடிக்க வேண்டும்.
🔯புதினாக் கீரையின் சாற்றை நெற்றியில் தடவினால் தலைவலி பறந்து போகும்.
🔯சீரகம், 1 கிராம்பு, 2 மிளகு ஆகிய அனைத்தையும் பசும்பாலில் கலந்து அரைத்து நெற்றியில் தடவ வேண்டும்.
🔯குப்பைமேனி இலையை தூளாக்கி, அந்த பொடியை மூக்கில் இட்டு நசிய விட கடுமையான தலைவலி நீங்கும்.
🔯கிராம்பு, கறுப்பு வெற்றிலை, இஞ்சி சாற்று ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து நெற்றியில் தடவலாம்.
🔯வில்வ இலையை உலர்த்திப் பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டால் தலைவலி குணமாகும்.
🔯3 கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட தலைப்பாரம் நீங்கும்.
🔯மஞ்சள் துண்டை வேப்ப எண்ணெயில் நனைத்து நெருப்பில் சுட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி குணமாகும்.
🔯ஒமத்தை தூள் செய்து மெலிதான சீலையில் முடிச்சுப் போட்டு அதை அடிக்கடி நாசியில் வைத்து முகர்ந்தால், ஜலதோஷம், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
🔯குப்பை மேனிச் செடியை இடித்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு தேய்த்து தலை குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக