Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

புதன், 13 மார்ச், 2019

பூச்சி மருந்து அனை­வ­ருக்கும் அவ­சி­யமா ?




வீட்டில்  யாருக்­கா­வது வயிற்­று­வ­லியா? சரு­மத்தில் திடீர் அரிப்பா? பசியே இல்லை என்­கி­றார்­களா? பூச்சி மருந்து கொடுத்துப் பார்க்கச் சொல்லி பெரி­ய­வர்கள் அறி­வு­றுத்­து­வதைக் கேட்­டி­ருப்போம். யாருக்கு பூச்சி மருந்­துகள் அவ­சியம்? ஏன் அவ­சியம்? எத்­தனை நாட்­க­ளுக்­கொரு முறை எடுத்துக் கொள்ள
வேண்டும்? என விளக்­கு­கிறார் பொது­நல மருத்­துவர் கலை­மதி.

“குழந்­தை­களை பாதிக்­கக்­கூ­டிய ஒரு முக்­கி­ய­மான பிரச்சினை குடற்­புழுத் தொல்லை. அசுத்­த­மான இடங்­க­ளிலும், மண் தரை­யிலும், தண்­ணீ­ரிலும் விளை­யா­டு­வது, அழுக்­க­டைந்த பொம்­மை­க­ளுடன் விளை­யா­டு­வது, குழந்­தை­களும் பெரி­ய­வர்­களும் காலில் செருப்பு அணி­யாமல் நடப்­பது, உணவு சாப்­பி­டு­வ­தற்கு முன் கைகளைக் கழுவிச் சுத்­தப்­ப­டுத்தத் தவ­று­வது, சமை­ய­லுக்கு முன் காய்­க­றி­களைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவ­று­வது போன்ற சுகா­தா­ர­மற்ற பழக்­கங்­களே குடற்­புழு ஏற்­ப­டு­வ­தற்குக் கார­ண­மா­கின்­றன.

பூச்­சிகள் இருந்தால், சரி­யாக சாப்­பி­டாமல் மெலிந்து, நிறம் வெளிறி காணப்­ப­டு­வார்கள். சில­ருக்கு வறட்டு இருமல், இளைப்பு மற்றும் வயிற்­றுப்­போக்கு ஏற்­ப­டலாம். சாலை­யோர உண­வ­கங்­களில் கைகளால் நேர­டி­யாக உணவு பரி­மா­றப்­ப­டு­வதால் அமீ­பி­யாசிஸ் தொற்று ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மா­கி­றது. இந்தத் தொற்று ஏற்­பட்­ட­வர்கள் சாப்­பி­டு­வ­தற்கு முன்னும் பின்னும் வயிற்று வலியால் அவ­திப்­ப­டு­வார்கள்.

அடிக்­கடி மலம் கழிக்க வேண்­டி­யது போல உணர்­வார்கள். குடற்­புழுத் தொற்று ஏற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு சரு­மத்தில் வெள்­ளைத்­திட்­டுகள் தோன்றி அரிப்பு ஏற்­படும். சில புழுக்கள் ஆசன வாயிலில் முட்டை இடு­கின்­றன. இதனால், அந்த இடத்தில் இரவில் அதிக அரிப்பு ஏற்­படும். அறி­யாமல் சொறிந்து கொண்டு, அதே கைகளை குழந்­தைகள் வாயில் வைக்­கும்­போது, பூச்­சிகள் மீண்டும் உட­லுக்குள் செல்­வது ஒரு தொடர் சுழற்­சி­யா­கவே நடை­பெறும்.

கொக்­கிப்­புழு நாளொன்­றுக்கு 0.2 மி.லி. இரத்­தத்தை உறிஞ்­சி­விடும். இதனால் இந்தப் புழு தாக்­கி­யுள்ள நப­ருக்கு வயிற்றுப் பிரச்சி­னை­க­ளோடு இரத்­த­சோகை நோயும் ஏற்­படும். இரத்­த­சோகை, சோர்வு, வெளி­றிய முகம் போன்ற அறி­கு­றிகள் தோன்றும் போது பெரி­ய­வர்­களும் மருத்­து­வ­ரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.குடற்­பு­ழுவை ஒழிக்கப் பெரி­ய­வர்­க­ளுக்கு மாத்­தி­ரை­களும், குழந்­தை­க­ளுக்குத் திரவ மருந்தும் கொடுக்­கப்­ப­டு­கி­றது.

பல­வகைப் புழுக்கள் இருப்­பதால், மேற்­கூ­றிய அறி­கு­றிகள் இருப்­ப­வர்கள் எந்தப் புழுவின் பாதிப்பு உள்­ளது என்­பதை மலப் பரி­சோ­தனை மூலம் தெரிந்­து­ கொண்டு, அதற்­கேற்ப மருத்­துவர் கூறு­வது போல குடற்­புழு நீக்கம் செய்து கொள்ள வேண்டும். 2 வய­துக்கு மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு 6 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை உள்­ளுக்குள் மருந்து கொடுக்க வேண்டும். மற்­ற­வர்­களைக் காட்­டிலும், அதி­க­மாக பாதையோர கடை­களில் சாப்­பி­டு­ப­வர்கள் குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­களில் குடற்­புழு நீக்கம் செய்து கொள்­வது மிக­மிக அவ­சியம்.

அவ­ரவர் வய­துக்­கேற்­ற­ப­டியும், நோய் அறி­கு­றி­க­ளுக்கு ஏற்­ற­வாறும் மருந்­து­களும் அளவும் மாறு­படும் என்­பதால் மருத்­து­வரின் ஆலோ­ச­னைப்­ப­டியே மருந்து எடுத்­துக்­கொள்ள வேண்டும். மாறாக தாங்­க­ளா­கவே மருந்துக் கடை­களில் கிடைக்கும் De-worming மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேற்கூறிய முறைகளை தவறாமல் கடைபிடித்தால் குடற்புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். புழுக்கள் அழியும்போது தானாகவே சருமத்தில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள், தடிப்புகள் போன்றவையும் மறைந்துவிடும்” என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் கலைமதி.

Source: வீரகேசரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக